


































































































































ஆசீவகம்
கோரக்கர் அறிவர் பள்ளி

ஆசீவகம்
ஆசு – பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென.
ஈவு – தீர்வு
அகம் – தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர்.
போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.
போதித்தலில் சத்துவ குணமுடையவர் அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்பமாதங்கர் (காச்யப மாதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. இவை பற்றிப் பின்னூற்களில் பேசுவோம். தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர் ) வழங்க பெற்றனர்.
இவ்வாறு பல்வேறு பிரிவினராக ஆசீவகத்தினர் பெயர் பெற்றுத் தமக்குள் பிணக்குற்றுக காலந்தோறும் மாற்றம் பெற்ற ஒழுகியல் கூறுபாடுகளைப் பின்பற்றத் துவங்கினர். காலம் என்பது சமயம் (வேளை) எனும் திசைச் சொல்லாலும் குறிக்கபெற்றது. (ஒரு வேளை என்பது ஒரு சமயம் என்பது போல்) காலத்தால் ஏற்பட்ட ஒழுகியல் மாற்றம் சமயம் எனும் பாகுபாட்டுப் பிணக்கினைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டு பொதுவியலில் பல்வேறு எதிர்மறைக் கருத்துகளையும் குழுக்கள் பிரிதலையும் ஏற்படுத்தியது. இதன் பின்னரே சமயங்கள் எனும் தோல் முட்டைகள் மதங்கள் எனும் வலிய ஓடுகளைத் தம்மீது போர்த்திக் கொண்டன. பல்வேறு காலங்களிலும் பிணக்குகள் பரிணாமம் பெற்றன.
அறிவர் ஆதி. சங்கரன்
கோரக்கர் அறிவர் பள்ளி,
மூலை ஆற்றங்கரை, வேளிய நல்லூர்
சேயாறு வட்டம்.
அகத்தியரருளிய தருக்க சூத்திரம்
நூலின் அணிந்துரை.. அகத்தியரருளிய தருக்க சூத்திரம் புத்தகம் வாங்க தொடர்பு கொள்ளவும். 9600690068 /7639420910 aninthurai-Ka.-Nedunchezhian1
மேலும் படிக்கஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்
கற்ப அவிழ்தம் சனவரி -2021 நூல் அறிமுகம் ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள் karpa-avizhtham
மேலும் படிக்கஅருள்நிறை அறிவர் கோரக்கர் திருஉடு வழிபாட்டு விழா 30-ஆம் ஆண்டு
அருள்நிறை அறிவர் கோரக்கர் திருஉடு வழிபாட்டு விழா 30-ஆம் ஆண்டு, கோரக்கர் அறிவர் பள்ளியின் ஆசான் அறிவர் ஆதி. சங்கரன் ஐயா அவர்களால் 05.12.2020 அன்று நடத்தப்பட்டது.
மேலும் படிக்கஆசான் பெருங்கணி ஒளியுடல் அடைந்தார்-கற்ப அவிழ்தம் சூன் -2021
ஆசான் பெருங்கணி ஒளியுடல் அடைந்தார்-கற்ப அவிழ்தம் சூன் -2021 உலகத் தமிழ் மருத்துவக் கழக வெளியீடு
மேலும் படிக்க